என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மகாதிர் முகம்மது
நீங்கள் தேடியது "மகாதிர் முகம்மது"
மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவிட்டுள்ளார். #Mahathir #NajibRazak
கோலாலம்பூர்:
மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதிர் முகம்மது, அனைத்து அமைச்சகங்களில் உள்ள ஆவணங்களையும், வெளியே எடுத்துச் செல்ல மற்றும் அழிக்கக்கூடாது.
முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் ஆட்சியில் இருந்த போது மலேசிய ஊழல் தடுப்புக்குழுவின் முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. அப்துல் நசாக் அரசு பணம் 4.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக் கூறப்பட்டது. அவர் மீது பல புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
என மகாதிர் முகம்மது கூறினார்.
கடந்த வாரம் நஜிப் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல இருப்பதால், அவர் பயணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மகாதிர் முகம்மது கூறினார். #Mahathir #NajibRazak
மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதிர் முகம்மது, அனைத்து அமைச்சகங்களில் உள்ள ஆவணங்களையும், வெளியே எடுத்துச் செல்ல மற்றும் அழிக்கக்கூடாது.
முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் ஆட்சியில் இருந்த போது மலேசிய ஊழல் தடுப்புக்குழுவின் முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. அப்துல் நசாக் அரசு பணம் 4.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக் கூறப்பட்டது. அவர் மீது பல புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
என மகாதிர் முகம்மது கூறினார்.
கடந்த வாரம் நஜிப் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல இருப்பதால், அவர் பயணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மகாதிர் முகம்மது கூறினார். #Mahathir #NajibRazak
மலேசியாவில் பிரதமராக நேற்று பதவியேற்ற மஹாதிர் முகம்மது தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க மன்னரிடம் அனுமதி பெற்றுள்ளார். #MahathirMohamad
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி
பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X